சிறுவனை கல்லால் அடித்து கொன்ற இளைஞர்: ஓரின சேர்க்கையால் நடந்த கொடூரம்!

 

சிறுவனை கல்லால் அடித்து கொன்ற இளைஞர்: ஓரின சேர்க்கையால் நடந்த கொடூரம்!

9 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை: 9 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த குறிச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தளவாய்.  இவருக்கு சரோஜா  என்ற மனைவியும்,  சந்தனமாரி (15) மற்றும்  கொம்பையா (9) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். மூன்றாம் வகுப்பு முடித்துள்ள கொம்பையா பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன்  சுற்றி  திரிந்து வந்துள்ளார்.

kombaiya

இந்நிலையில் வழக்கம் போல கடந்த 26-ஆம் தேதி விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கொம்பையா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

youth

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குறிச்சிக்குளம் அருகே உள்ள 4 வழிச்சாலையை ஒட்டியிருக்கும் முட்புதரில் கொம்பையாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

police

இந்த கொலை வழக்கு தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த  மாயாண்டி என்ற இளைஞரை  போலீசார் கைது செய்தனர்.  ஓரின சேர்க்கையாளரான  மாயாண்டி சிறுவன் கொம்பையாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவனை அப்படியே விட்டால் நடந்ததை வெளியில் சொல்லிவிடுவான்  என்று  பயந்து, கொம்பையாவை  கல்லால் அடித்து கொலை செய்திருப்பது அம்பலமானது. சிறுவன் ஒருவன்  கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.