சிறுவனுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது; அதிர்ச்சி தரும் சம்பவம்!
சிறுவனை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்ற பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சிறுவனை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்ற பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் பிரசாத் இவரது மகன் ராஜா (17) தனியார் மருத்துவமனையில் அட்டென்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகில் உள்ள மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி ஸ்வேதா (23) என்பவருக்கும் மருத்துவமனையில் வந்தபோது நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது தவறான உறவாக மாறி உள்ளது.
இதுகுறித்து ராஜாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் இருவரின் நட்பும் தொடர்ந்த நிலையில், கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜாவையும், ஸ்வேதாவையும் கண்டுபிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மைனர் சிறுவனை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற ஸ்வேதா மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். முன்னதாக தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.