சிறுவனுக்கும் சிறுமிக்கும் நடந்த நிச்சயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் !

 

சிறுவனுக்கும் சிறுமிக்கும் நடந்த நிச்சயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் !

திருமணம் நடக்கவுள்ள மணப்பெண்ணுக்கும் மணமகளுக்கும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்று காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நாகராஜபுரம் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. கடந்த 10 நாட்களாக அந்த வீட்டில் திருமண வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த திருமணம் நடக்கவுள்ள மணப்பெண்ணுக்கும் மணமகளுக்கும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்று காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர், அதிரடியாக அங்குச் சென்ற காவல்துறையினர், அவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ytttn

அங்கு மணமக்களின் வயதைச் சோதித்துப் பார்த்ததில் அவர்களது வயது சரியாக இருந்ததும், காவல்துறைக்குக் கிடைத்தது பொய்யான தகவல் என்றும் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், அந்த வீட்டின் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் 17 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 18 வயது முடிவதற்குள் திருமணம் செய்வது தவறு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் அளித்த பதில் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

அந்த சிறுவர்களின் பெற்றோர்கள், தற்போது இவர்களுக்கு 17 வயது ஆகிறது. இன்னும் 6 மாதத்தில் 18 வயது ஆகிவிடும். இப்போதைக்கு நிச்சயம் செய்து வைக்கிறோம். திருமணம் ஆறு மாதத்திற்குப் பிறகு தான் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இது குறித்து சமுக நலத்துறை அலுவலகம் வந்து கடிதம் ஒன்று எழுதிக் கொடுக்க சொல்லிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.