சிறுமி கை கொடுப்பதை கவனிக்கத் தவறிய இளவரசர்… வீடு தேடி சென்ற பெருந்தன்மை!

 

சிறுமி கை கொடுப்பதை கவனிக்கத் தவறிய இளவரசர்… வீடு தேடி சென்ற பெருந்தன்மை!

சில தினங்களுக்கு முன்பு சவுதி இளவரசர் அமீரகம் வந்திருந்தார். அவரை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். இருவரும் நடந்து வரும்போது, சிறுவர்கள் அவர்களை வரவேற்றனர். இரு புறமும் சிறுவர்கள் திரண்டு நின்றிருந்தனர். வலது புறம் சௌதி இளவரசர் குழந்தைகளுக்கு கைகுலுக்கியபடி வந்தார். இடது புறம் அபுதாபி பட்டத்து இளவரசர் வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு சவுதி இளவரசர் அமீரகம் வந்திருந்தார். அவரை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். இருவரும் நடந்து வரும்போது, சிறுவர்கள் அவர்களை வரவேற்றனர். இரு புறமும் சிறுவர்கள் திரண்டு நின்றிருந்தனர். வலது புறம் சௌதி இளவரசர் குழந்தைகளுக்கு கைகுலுக்கியபடி வந்தார். இடது புறம் அபுதாபி பட்டத்து இளவரசர் வந்தார்.

king

அப்போது, சௌதி இளவரசர் வரும் வழியில் நின்ற ஒரு சிறுமி எதிர்புறம் ஓடிச் சென்று அபுதாபி இளவரசருக்கு கை குலுக்க தயாராக நின்றார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த சிறுமிக்கு இளவரசர் கை கொடுக்கவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
இந்த வீடியோவை கண்ட அபுதாபி பட்டத்து இளவரசர் சிறுமி யார், அவரது வீடு எங்கே உள்ளது என்று விசாரிக்க உத்தரவிட்டார்.

சிறுமி பற்றிய விவரம் கிடைத்ததும் நேராக அந்த சிறுமியின் வீட்டுக்கே சென்றுவிட்டார் அவர். இளவரசரை கண்ட சிறுமி ஆனந்தம் அடைந்தார். அங்கு சிறுமிக்கு கை குலுக்கியதுடன், நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார் இளவரசர்.  தற்போது அந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீதின் இந்த செயல் பலரையும் ஈர்த்துள்ளது.