சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்..சிபிஐ விசாரணை கோரி வழக்கு!

 

சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்..சிபிஐ  விசாரணை கோரி வழக்கு!

உயிரிழப்பற்கு முன்னால் அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் குடும்ப பகையின் காரணமாக 15 வயது சிறுமியின் கைகளை கட்டி, பெட்ரோல் ஊற்றி அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர்  கொளுத்தினர். அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழப்பற்கு முன்னால் அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ttn

இந்நிலையில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ  விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கொலை செய்த இரண்டு பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதால், தமிழக காவல்துறை விசாரித்தால் உரிய நீதி கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.