சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்!

 

சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்:  முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்!

வேலை வாங்கி தருவதாகக் கூறி 16 வயது சிறுமியை  பாலியல் தொழிலில் தள்ளிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

காஞ்சிபுரம்:  வேலை வாங்கி தருவதாகக் கூறி 16 வயது சிறுமியை  பாலியல் தொழிலில் தள்ளிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமியை அவரது பக்கத்துவீட்டுக்கார பெண் வேளாங்கன்னி என்பவர் சென்னையில் வேலை வகி தருவதாகக் கூறியுள்ளார். வறுமையின் காரணமாகச் சிறுமியின் குடும்பத்தினரும் சம்மதிக்க 5 ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்து சிறுமியை அழைத்துள்ளார். இதன் பிறகு ஆறுமாதத்திற்குப் பிறகு கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகைக்கு சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னைக்கு செல்லலாம் என்று அழைக்கச் சிறுமி செல்ல மறுத்துள்ளார். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர். 

ttn

அப்போது சிறுமியை ஒரு வீட்டில் வேலைக்கு  சேர்த்து  விட்ட வேளாங்கன்னியின் ஆண்  நண்பர்கள் சிலர் சிறுமியை கட்டாயப்படுத்தி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு, எங்கள் விருப்பபடி நடந்து கொள்ளாவிட்டால் உன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் ஊரில் உள்ள உன் குடும்பத்தை கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர் என்று கூறியுள்ளார். 

abuse

இது குறித்து சிறுமி நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானியிடம் , புகார்  தெரிவித்தார். அவரது புகாரில் மேலும்  பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் உள்பட கடந்த 4 மாதங்களில் மட்டும்  100 க்கும் மேற்பட்ட நபர்கள் தன்னை வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார். 

abuse

இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேளாங்கன்னி, அவரது, தம்பி, சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் உள்ளிட்ட நபர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளனர். வேலை வாங்கி  தருவதாக கூறி சிறுமியை சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய  சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: நம்பி வந்த பெண்ணை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்