சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த மில் முதலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

 

சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த மில் முதலாளி போக்ஸோ  சட்டத்தில் கைது

13 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த மில் முதலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: 13 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த மில் முதலாளி போக்ஸோ  சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயபவுல் (48) என்ற மில் முதலாளியிடம் சிறுமியின் பெற்றோர்கள் வேலை செய்துள்ளனர். வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக சிறுமியை கூட்டி சென்று பாலியல் சித்ரவதை கொடுத்திருக்கிறார் ஜெயபவுல், வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது ஜெயபவுலின் மில். அந்தப் பகுதியில் வருவாய் அலுவலர் நடத்திய சோதனையில் 31 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். அதில் 6 பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பரிசோதனை மற்றும் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயபவுல் போக்ஸோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேறு எந்த பெண்ணுக்கும் பாலியல் சித்ரவதை கொடுத்திருக்கிறாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.