சிறுமியை கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர்…கொலை செய்து விடுவேன் என மிரட்டல்!

 

சிறுமியை கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர்…கொலை செய்து விடுவேன் என மிரட்டல்!

பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது  சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜ். 50 வயதான இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராக உள்ளார். அதேசமயம் டிவி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.  

ttn

இந்நிலையில் ராஜ் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை திருமணம் செய்து  கொள்வதாக கூறி தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் கர்ப்பம் அடைந்தது தெரியாமல் சிறுமி தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது  சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். 

ttn

இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் கர்ப்பம் கலைய மருந்து கொடுத்துள்ளனர். இதனால், ஆறு மாதமான குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பின்னர் யாருக்கும் தெரியாமல் இறந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் துறை, சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமியை கர்ப்பமாக்கியது மட்டுமல்லாது வெளியில் சொன்னால்  கொலை செய்து விடுவேன் என்று திமுக பிரமுகர் ராஜ் மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து  புதுக்கோட்டைத் தப்பி சென்ற ராஜை புதுக்கோட்டை காவல்துறை போக்ஸோ  சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.