சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்; அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

 

சிறுமியை  கடத்தி  சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்; அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

பள்ளி செல்லும் மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேர் பெங்களூருக்கு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: பள்ளி செல்லும் மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேர் பெங்களூருக்கு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி.  அங்குள்ள அரசு உதவி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த 2 ஆண்டுகளாக சக மாணவிகளுடன், அந்த சிறுமி வாடகை ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த திங்கட்கிழமை அன்று  வீட்டிற்கு வராததால், பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மாணவி, பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து தனிப்படை போலீசார், மாணவியை தினம் தோறும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் அர்ஃபான் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர், அந்த மாணவியை காரில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பெங்களூரில் பதுங்கியிருந்த ஆட்டோ டிரைவர் அர்ஃபான் அவரது நண்பர்கள் இர்பான்கான், முதாசீர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஆட்டோ நிறுத்தத்தில் மாணவி நிற்கும்போது ஆட்டோ  டிரைவர் அர்ஃபான் பழக்கமாகியுள்ளார்.  இதனால் அந்த மாணவியை பெங்களூர் கடத்தி சென்ற அவர், ஒரு தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பள்ளி மாணவியை கடத்தி சென்று 5 பேர்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.