சிறுமியின் மீது தீரா மோகம்… கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபர்!!

 

சிறுமியின் மீது தீரா மோகம்… கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபர்!!

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த ஆந்திர வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த ஆந்திர வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது 14 வயது மகளைகாணவில்லை என்று கடந்த 8ஆம் தேதி புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார்.  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியை   திருப்பதியில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி பேருந்து மூலம் கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர் என்ற செய்தியை கேட்ட அந்த வாலிபர், திருமணம் செய்துகொண்டு  வந்தவுடன் அவரது வீட்டருகே விட்டுவிட்டு ரயில்மூலம் திருப்பதிக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

 தகவலறிந்த புளியந்தோப்பு அனைத்து  மகளிர் காவல்துறையினர் செண்ட்ரல் ரயில்நிலையிலிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் பால கிருஷ்ணன் என்பது, அவர் துணிக்கடை ஒன்றில் வேலை செய்ததும் தெரியவந்தது. திருப்பதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு இந்த சிறுமி வரும்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் சிறுமியின் மீதுள்ள ஆசையால் அவரை ஏமாற்றி விட்டைவிட்டு வெளியே வர சொல்லி திருப்பதி சென்று திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார். பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.