சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: வீட்டை விட்டு வெளியேறியதால் நடந்த கொடூரம்!
15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்: 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணாமல் போன சிறுமி
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை காணவில்லை என்று அவரது தந்தை விஷ்னுகாஞ்சி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் கீழ் போலீசார் சிறுமியை தேடும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, சிலர் ஆட்டோவில் சிறுமியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ எண்ணை வைத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
ரத்தவெள்ளத்தில் கிடந்த கொடூரம்
இதையடுத்து, மின்நகர் பகுதியில் சாலையோரம் ரத்த கறையுடன் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சிறுமியை மீட்டு,காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில்,தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியை கண்ட ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பவர் அக்கறையாகப் பேசி, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததுடன், தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜா, தேவா ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: ‘உங்கள் அளவுக்கு அனுபவம் இல்லை’: சசிகலாவை வைத்து எடப்பாடியை கலாய்த்த உதயநிதி