சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முன்னாள் இமாம் மதுரையில் கைது!

 

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முன்னாள் இமாம் மதுரையில் கைது!

கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பிய முன்னாள் இமாம் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

மதுரை: கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பிய முன்னாள் இமாம் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்தவர் ஷஃபிக் அல் குவாஸிமி. இவர் தோலிகோடு முஸ்லிம் மசூதியில் இமாமாக உள்ளார். அத்துடன் கேரள இமாம் கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் 15 வயது சிறுமி ஒருவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தோலிகோடு முஸ்லிம் மசூதி சார்பில் குவாஸிமியிடம் தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய இமாம் கவுன்சிலில் இருந்தும் குவாஸிமி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

rape ttn

இமாம், சிறுமி ஒருவருடன் காட்டிற்குள் இருந்து வருவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரிடம் அப்பெண் யார் என கேட்டுள்ளனர்.  அதற்கு இவர் தன் மனைவி என இமாம் கூறியுள்ளார். ஆனால் காருக்குள் பள்ளி சீருடை மற்றும் பேட்ஜ் இருப்பதைப் பார்த்துச் சந்தேகமடைந்த ஊர்மக்கள், பள்ளி மாணவி எப்படி மனைவியாக முடியும் எனப் பெண்கள் கேட்டதற்கு குவாஸிமி காருடன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரின் காரை பிடிக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து காரை வேகமாக இயக்கி தப்பியதாக தெரிகிறது. 

imam

தொடர்ந்து இமாம் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்ததும் அவர் தலைமறைவானார். நெடுமங்காடு போலீஸ்  துணை டி.எஸ்.பி அசோகன் தலைமையில் 5 தனிப் படையினர் அல் குவாஸ்மியைத் தேடிவந்தனர். இந்த நிலையில், சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு,  மதுரையில் லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்த அல் குவாஸ்மியை கேரள போலீஸார் கைது செய்தனர். முன்னதாக நெடுமங்காடு போலீஸார் அல்குவாஸ்மியை கைது செய்ய அவரின் வீட்டுக்குச்  சென்றனர். அப்போது, காரை மூடப் பயன்படுத்தும் கவரை பயன்படுத்தி தன் சகோதரரைக் காப்பாற்றிய அல்குவாஸ்மின் சகோதரர் அல் அமீனும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.