சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா போக்ஸோவில் கைது!

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா போக்ஸோவில் கைது!

இதனால் சிறுமி கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். அதற்குள் சிறுமியின் சித்தப்பா அங்கிருந்து தப்பியுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரின் தாய் இறந்துவிட்டார். இதையடுத்து  தந்தையும் பெற்ற  மகளை கைவிட நிர்க்கதியாக  நின்ற சிறுமிக்கு தாயின் தங்கையான சித்தி அடைக்கலம் கொடுத்துள்ளார். 

ttn

இதையடுத்து 16 வயதான அந்த சிறுமி  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி காதுவலி காரணமாக சிறுமி சிகிச்சை பெற பள்ளி விடுதியிலிருந்து சித்தி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்தியின் கணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். அதற்குள் சிறுமியின் சித்தப்பா அங்கிருந்து தப்பியுள்ளார்.

ttn

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் சிறுமியின் சித்தப்பாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.