சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி வார்டன்…போக்ஸோ சட்டத்தில் கைது!
பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினந்தோறும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூரில் 16 வயது சிறுமிக்கு விடுதி வார்டன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் உள்ள அரசுப்பள்ளியில் 16 வயது சிறுமி அதேபள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருக்கு அந்த விடுதியில் வார்டனாக பணியாற்றும் வெங்கடாசலம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாய், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் கலையரசி, விடுதி வார்டன் வெங்கடாசலத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, வெங்கடாசலத்தை 15 நாள் நீதிமன்றக் காவலில் உத்தரவிட்டதையடுத்து வெங்கடாசலம் பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.