சிறுமிக்கு பாலியல் தொல்லை; மருத்துவமனைக்கே சென்று தண்டனை விதித்த நீதிபதி

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை; மருத்துவமனைக்கே சென்று தண்டனை விதித்த நீதிபதி

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால் மருத்துவமனைக்கே சென்று நீதிபதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

கடலூர்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால் மருத்துவமனைக்கே சென்று நீதிபதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் புதிய வீடு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.  இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையின் புகார் தெரிவித்தனர். அதனையடுத்து சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சங்கரநாராயணனை குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இதைகேட்டதும் அதிர்ச்சி அடைந்த சங்கர நாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையிஹ்ல் அனுமதித்தனர். அங்கு அவருக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல் நிலையை காரணம் காட்டி ஆஜராகவில்லை.

இந்நிலையில், நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கரநாராயணனை சந்தித்து , சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இது தொடர்பாக சங்கரநாராயணனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதிபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீர்ப்பைகேட்டு சங்கரநாராயணன் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.