சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு ஆசிரியர்: போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு ஆசிரியர்: போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

சேலம் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.  இங்கு 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பள்ளி செல்ல மறுத்துள்ளார். இது குறித்து விசாரித்த பெற்றோருக்கு, கணக்கு ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் கணக்கு ஆசிரியர் சதீஷை சாலையில் வைத்து அடித்து உதைத்தனர். இத்தாக்குதலில் ஆசிரியர் படுகாயம் அடைந்ததையடுத்து  பள்ளப்பட்டி போலீசார் சதீஷை மீட்டுக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் இவ்வழக்கு சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

 

அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர். அதில், பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் சதீஷ்  போக்சோ சட்டம்  கீழ் கைது செய்யப்பட்டு  சேலம் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.