சிறுநீர் கழித்ததால் 7 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாயின் காதலன்: பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

 

சிறுநீர் கழித்ததால் 7 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாயின் காதலன்: பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

சிறுநீர் கழித்ததற்காகச் சிறுவனின் அண்ணனைக் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த  7 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான். 

தொடுபுழா : சிறுநீர் கழித்ததற்காகச் சிறுவனின் அண்ணனைக் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த  7 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான். கேரளா மக்களையும் தாண்டி  இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைவரும் அக்குழந்தை பிழைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்தது எல்லாம் பொய்த்துவிட்டது அந்த மழலையின் மரணத்தினால்….!

கொடூர தாக்குதல் நடத்திய தாயின் கணவன் 

accused

கேரளாவின் தொடுபுழா அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்  கணவர் இறந்தபிறகு அவரின் சொந்த ஊருக்குச் சென்றபோது கணவரின் உறவினர் அருண் ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன்  வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு 7 வயதில் ஒரு மகனும், மூன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தைகளை கடந்த 29 ஆம் தேதி வீட்டில் விட்டுவிட்டு இருவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தூங்கிய சிறுவர்களில் மூன்றரை வயது குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளது. வீடு திரும்பிய பின் இதை கண்ட அருண் ஆனந்த், சிறுவன் சிறுநீர் கழித்ததை ஏன் சுத்தம் செய்யவில்லை என்றுக்கூறி சிறுவனின் அண்ணனான ஏழு வயது பையனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

நிலைகுலைந்து போன சிறுவன் 

boy

சிறுவனின் வயிற்றில் மிதித்தவர், பின்னர் சிறுவனை கீழே தூக்கி வீசியும், சுவர் மற்றும் கட்டிலின் கம்பிகளில்  தலையையும் முட்ட வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் தலையில் ஏற்பட்ட காயத்தால்  வீடு முழுவதும் ரத்தம் சிந்தியுள்ளது. இதைத் தடுக்க வந்த அவனின் தாயையும் அருண் தாக்கியுள்ளார். சிறுநீர் கழித்த அந்த மூன்று வயது சிறுவன் மீதும் தாக்குதல் நடத்தியதில் அந்தச் சிறுவனுக்கும் பல் உடைந்துள்ளது. 

குற்றவாளி கைது 

arrest

இதையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்து என்று கூறிய அப்பெண், மற்றும் அருண் ஆனந்த் மீது சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது  குறித்து போலீஸிடம் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கிருந்து மூன்றரை வயது சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. இதையடுத்து அருண் ஆனந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பரிதாப பலி 

arrest

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோட்டயம் மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாகத் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு மூளைக்கு செல்லும் ரத்தம் முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

அடிப்படை மனித தன்மை கூட இல்லாமல் ஒன்றும் அறியாத சிறுவனை அடித்து கொன்ற குற்றவாளி அருண் ஆனந்துக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என்று பலவேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இதையும் வாசிக்க: ஆணாக வேடமிட்டு சிறுமிகளை காதல் வலையில் சிக்க வைத்த இளம்பெண்: ஷாக் ரிப்போர்ட்!