சிறுநீர் கழித்ததால் சிறுவனை அடித்து கொன்ற தாயின் காதலன்: ஒரு மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட தாய்!?

 

சிறுநீர் கழித்ததால் சிறுவனை அடித்து கொன்ற தாயின் காதலன்: ஒரு மாதத்திற்கு  பிறகு கைது செய்யப்பட்ட தாய்!?

தாயின் காதலரால் கொடூரமாக தாக்கப்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தொடுபுழா : தாயின் காதலரால் கொடூரமாக தாக்கப்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கேரளாவின் தொடுபுழா அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்  கணவர் இறந்தபிறகு அவரின் சொந்த ஊருக்குச் சென்றபோது கணவரின் உறவினர் அருண் ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன்  வாழ்ந்து வந்துள்ளார்.

kerala

அந்த பெண்ணுக்கு 7 வயதில் ஒரு மகனும், மூன்றரை வயதில் ஒரு மகனும் இருந்தனர். இதையடுத்து  கடந்த மார்ச்  28  ஆம் தேதி மூன்றரை வயது குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் காதலர் சிறுவன் சிறுநீர் கழித்ததை ஏன் சுத்தம் செய்யவில்லை என்றுக்கூறி சிறுவனின் அண்ணனான ஏழு வயது பையனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

சிறுவனின் வயிற்றில் மிதித்தவர், பின்னர் சிறுவனை கீழே தூக்கி வீசியும், சுவர் மற்றும் கட்டிலின் கம்பிகளில்  தலையையும் முட்ட வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனால் தலையில் ஏற்பட்ட காயத்தால்  வீடு முழுவதும் ரத்தம் சிந்தியுள்ளது. இதைத் தடுக்க வந்த அவனின் தாயையும் அருண் தாக்கியுள்ளார். சிறுநீர் கழித்த அந்த மூன்று வயது சிறுவன் மீதும் தாக்குதல் நடத்தியதில் அந்தச் சிறுவனுக்கும் பல் உடைந்துள்ளது. 

kerala

இதையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்து என்று கூறிய அப்பெண், மற்றும் அருண் ஆனந்த் மீது சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது  குறித்து போலீஸிடம் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கிருந்து மூன்றரை வயது சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. இதையடுத்து அருண் ஆனந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோட்டயம் மருத்துவமனையில்  9 நாட்களாகத் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

crime

இந்நிலையில் இறந்து போன சிறுவனின் தாய் இன்று தொடுபுழா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை காப்பாற்ற உண்மையை மறைத்த குற்றத்திற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 201 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்றும் கூறப்படுகிறது. 

அடிப்படை மனித தன்மை கூட இல்லாமல் ஒன்றும் அறியாத சிறுவனை அடித்து கொன்ற குற்றவாளி அருண் ஆனந்த் மற்றும் அவரது தாய்க்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என்று பலவேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவது  குறிப்பிடத்தக்கது.