சிறுநீரை குடிக்க சொல்லி சரமாரி தாக்குதல்: தூக்கில் தொங்கிய 19 வயது இளைஞர்!
அங்குள்ள குழாயில் குவளையில் நீர் பிடித்துள்ளார். அப்போது தண்ணீரானது அருகில் இருந்த பாத்திரங்கள் மீது தெறித்துள்ளது.
மத்தியப்பிரதேசம் போபாலில் இருந்து 300கிமீ தொலைவில் உள்ள சஜோர் கிராமத்தில் 19 வயதான விகாஸ் சர்மா என்ற இளைஞர் அங்குள்ள குழாயில் குவளையில் நீர் பிடித்துள்ளார். அப்போது தண்ணீரானது அருகில் இருந்த பாத்திரங்கள் மீது தெறித்துள்ளது.
இதை கண்ட அந்த பாத்திரங்களுக்கு உரிமையாளரான பெண்கள் உள்பட மூவர் அந்த இளைஞரை சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் அந்த குவளையில் சிறுநீரை நிரப்பி அதை குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த விகாஸ் வீட்டிற்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கடிதம் ஒன்றையும், விகாஸ் இறப்பு குறித்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதன்படி 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.