சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது: முதல்வர் மகிழ்ச்சி

 

சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது: முதல்வர் மகிழ்ச்சி

தகுதி நீக்க வழக்கில் சிறப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: தகுதி நீக்க வழக்கில் சிறப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கல் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு டிடிவி தரப்புக்கு ஏமாற்றத்தையும், ஈபிஎஸ் தரப்புக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா ஆட்சி நடந்து வரும் வேளையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. 20 தொகுதிகளுக்கான இடைதேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெறும். ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.