சிரிக்க வைத்த ரங்கம்மா பாட்டிக்கு பீச்சில் கர்ச்சீஃப் விற்கும் நிலை; நடிகர் சங்கம் கைக்கொடுக்குமா?

 

சிரிக்க வைத்த ரங்கம்மா பாட்டிக்கு பீச்சில் கர்ச்சீஃப் விற்கும் நிலை; நடிகர் சங்கம் கைக்கொடுக்குமா?

காமெடியில் கலக்கிய ரங்கம்மா பாட்டி தற்போது இருக்கும் நிலை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: காமெடியில் கலக்கிய ரங்கம்மா பாட்டி தற்போது இருக்கும் நிலை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி அஜித், விஜய் வரை ஏராளமான நடிகர்களின் படங்களில் ரங்கம்மா பாட்டி நடித்த ரங்கம்மா பாட்டி, வடிவேலுவின் டிரேட் மார்க் காமெடிகளில் ஒன்றான..’இந்தா அந்த நாய கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போஎன்ற காமெடி மூலம் பிரபலமானவர்.

திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்த ரங்கம்மா பாட்டி தற்போது மெரினா பீச்சில் கர்ச்சீஃப் மற்றும் பொம்மைகள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் வசித்து வரும் ரங்கம்மா பாட்டி, திரைப்பட வாய்ப்புகள் இன்றி வறுமையில் வாடுகிறார்.

rangammapaatti

பீச்சில் கர்ச்சீஃப் விற்பது பற்றி பேசிய ரங்கம்மா பாட்டி, 500 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் கிடைத்த வருமானம் சொற்பம் தான். அதுவும் எனது பிள்ளைகளுக்காக செலவழித்துவிட்டேன். தள்ளாடும் வயதிலும் நடிக்க தயாராக இருந்தும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பிட்டிற்கே கஷ்டப்படும் நிலை வந்துவிட்டது.

எது எப்படியானாலும், எம்.ஜி.ஆர் ஒரு பாடலில் சொன்னது போல் நான் உழைத்து தான் உண்ணுவேன், யாரிடமும் நான் கை எந்தியது இல்லை. நான் சாகும்வரை நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்றும் ரங்கம்மா பாட்டி கூறியுள்ளார்.

rangamma

ரங்கம்மா பாட்டியின் இந்த நிலை குறித்து பிரபலங்கள் சிலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில், பாட்டிக்கு உதவ நடிகர் சங்கம் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். நலிந்த கலைஞர்களின் நலனை காக்கவிருக்கும் நடிகர் சங்கம் ரங்கம்மா பாட்டியின் வறுமையை தீர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.