‘சிரஞ்சீவி கேட்கவில்லை, நான் சொல்வதை நீங்களாவது கேளுங்கள் ரஜினி’ : அமிதாப் பச்சன் அட்வைஸ்!

 

‘சிரஞ்சீவி கேட்கவில்லை, நான் சொல்வதை நீங்களாவது கேளுங்கள் ரஜினி’ : அமிதாப் பச்சன் அட்வைஸ்!

ரஜினியின் மக்கள் மன்றத்தினர்   கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு அரசியல்  வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்துப் பேட்டியளித்த வரும் அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

rajini

இருப்பினும் தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் சொல்லி வரும் ரஜினி, சில சர்ச்சை கருத்துக்களைக்  கூறி பாஜக ஆதரவாளர் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.தற்போது ரஜினியின் மக்கள் மன்றத்தினர்   கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

amitabh

இந்நிலையில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,  ‘சிரஞ்சீவியை அரசியலுக்கு வர வேண்டாம் 
 என்றேன் . ஆனால் அவர் கேட்கவில்லை. அதே அறிவுரையை இப்போது ரஜினிகாந்துக்கு சொல்கிறேன்’ என்றார். 

chiranjeevi

முன்னதாக ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிரஞ்சீவி, ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது