சிரஞ்சீவியின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

 

சிரஞ்சீவியின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

மாஸ் ஹீரோஸ் யாரும் இப்போது ஸ்ரீனு வைட்லா படத்தில் நடிக்கத் தயாராக இல்லை. சினிமா வட்டார தகவலின் படி, ஸ்ரீனு வைட்லா மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு திரைப்படத்தை எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

காமெடி மற்றும் கமர்சியல் படங்கள் எடுப்பதில் ஸ்ரீனு வைட்லா பிரபலமானவர். 1999 ஆம் ஆண்டில் ரவி தேஜா மற்றும் மகேஸ்வரி நடித்த ‘நீ கோசம்’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான படமாக இருந்தாலும், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ஸ்ரீனு வைட்லா தனது திரைப்பட வாழ்க்கையில் பல ஹிட் திரைப்படங்களை வழங்கியிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக ஆகாடு, புரூஸ் லீ, மிஸ்டர், மற்றும் அமர் அக்பர் அந்தோணி போன்ற திரைப்படங்களின் தோல்விக்கு பின்னால், வாய்ப்புகளை இழந்து வருகிறார்.

srini-vailtla

மாஸ் ஹீரோஸ் யாரும் இப்போது ஸ்ரீனு வைட்லா படத்தில் நடிக்கத் தயாராக இல்லை. சினிமா வட்டார தகவலின் படி, ஸ்ரீனு வைட்லா மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு திரைப்படத்தை எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இயக்குனர் ஸ்ரீனு வைட்லா மெகாஸ்டார் சிரஞ்சீவியை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து கதை கூற அப்பொய்ன்ட்மென்ட் கேட்டுள்ளார். இருவரும் ஏற்கனவே  ‘அதிரிவாடு’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

megastar

தற்போது சிரஞ்சீவி த்னது 152 வது படத்திற்காக கோரட்டலா சிவாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார், இந்த படத்திற்கு தற்காலிகமாக ஆச்சார்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. சோசியல் மெசேஜ் உள்ள படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். திரிஷா இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கிறார்.