சியோமி கோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

சியோமி கோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பை: ரெட்மி கோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி நிறுவனம் முதன் முறையாக ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவிருக்கிறது. அந்த ஸ்மார்ட்போனுக்கு ரெட்மி கோ ஸ்மார்ட்போன் என்று அந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்தியாவில் மார்ச் 19-ஆம் தேதி இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக் மற்றும் புளு என இருவிதமான நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 75 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,240) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்களாக 5.0 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்), டூயல் சிம் ஸ்லாட், 8 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 5 எம்.பி செல்ஃபி கேமரா, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.1, 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது.