சியாச்சின் மலைப் பகுதியில் திடீர் பனிச்சரிவு : 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

 

சியாச்சின் மலைப் பகுதியில் திடீர் பனிச்சரிவு : 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

யூனியன் பிரசேதம் லடாக்கில் இருந்து வடகிழக்கு திசையில் காரகோரம் மலைத்தொடர் உள்ளது.

யூனியன் பிரசேதம் லடாக்கில் இருந்து வடகிழக்கு திசையில் காரகோரம் மலைத்தொடர் உள்ளது. அந்த மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 18,000 அடி உயரத்தில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. சர்வதேச எல்லையான சியாச்சின் மலைப்பகுதி, உலகிலேயே மிக உயரமான போர் புரியும் பகுதியாகும். இந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் செல்ல வேண்டாம் என்று இந்திய ராணுவம் 1984 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

siyachin

இந்த மலைப்பகுதியில் நேற்று மதியம் 3:30 மணிக்கு திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், 4 பாதுகாப்புப் படை ராணுவ வீரர்கள், 2 சுமை தூக்கும் சாமானியர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த பனிச்சரிவில் சிக்கிய 8 வீரர்களில், 7 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.