சிம்பு மீது மோசடி வழக்கு:  செக் வைத்த தயாரிப்பாளர்கள்!

 

சிம்பு மீது மோசடி வழக்கு:  செக் வைத்த தயாரிப்பாளர்கள்!

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படம் தோல்வியை தழுவியது.

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படம் தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் ஷூட்டிங்கு சரியாக வராத காரணத்தினால் படத்திலிருந்து அவர் நீக்கப்படாததாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். தற்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. 

இந்த நிலையில் இதுகுறித்து பேச அழைத்த பொது சிம்பு சரியாக பதிலளிக்கவில்லையாம். அதனால் தயாரிப்பாளர்களான ‘மாநாடு’ – சுரேஷ் காமாட்சி, `விண்ணைத்தாண்டி வருவாயா 2′ – விஜய ராகவேந்திரா, ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் நிறுவனர் பூமி பில்டர்ஸ் சுந்தர் என சிம்புவுக்கு முன் பணம் கொடுத்த அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர்.

அதுமட்டுமின்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சிம்பு மீது ஃபோர்ஜரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரை ஏற்று நடவடிக்கை எடுப்பதாகப் போலீஸ் கமிஷனர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.