“சிம்பு ஃபேன்னு ஒருத்தன் சொன்னா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க” கல்லூரி பெண்களுக்கு எஸ்டிஆரின் அட்வைஸ்!
நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதனால் படப்பூஜை சமீபத்தில் ஆரம்பமாகியது.
நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதனால் படப்பூஜை சமீபத்தில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று தனியார் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாக பேசினார்.
குறிப்பாக , ‘பார்முலா 1 ரேஸ் பாத்திருப்பீங்க. அதில் இடையில் ஒரு பிரேக் எடுப்பார்கள். டயர் மாற்ற, fuel refill செய்வது என பல விஷயங்கள் செய்வார்கள். அதுபோல நானும் சின்ன பிரேக் எடுத்தேன். ஆனால் ஒருமுறை ட்ராக்குல வந்துட்டா வண்டி எப்படி ஓடும்னு உங்கள் தெரியும். மாநாடு படத்துல நடிக்குறேன். தொடர்ந்து பல படங்கள் பண்ணலாம்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கு படங்கள் கிடைப்பதைத் தடுக்கவே ஒரு கூட்டம் இருக்கும். நீங்க எனக்கு அன்பு கொடுத்தா அவங்களுக்கு தான் காண்டாகும’ என்று கூறிய அவர், ‘சிம்பு ரசிகன்னு பசங்க சொன்னா தைரியமா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க.
ஊரே என்னை கழுவு ஊற்றும் போது, என் தலைவன் வருவான்டா என்று தைரியமா நின்னாங்களே. அப்போ கட்டுன பொண்ணுக்கும், காதலிக்கும் சப்போர்ட்டா எப்படி நிப்பாங்கன்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க’ என்று பேசியுள்ளார். சிம்புவின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.