“சிம்புவுடன் நெருக்கம்…வேண்டாம் என்று கூறும் தர்ஷன்” : சர்ச்சையை கிளப்பும் தர்ஷன் – சனம் ஷெட்டி காதல்?!

 

“சிம்புவுடன் நெருக்கம்…வேண்டாம் என்று கூறும் தர்ஷன்” : சர்ச்சையை கிளப்பும் தர்ஷன் – சனம் ஷெட்டி காதல்?!

திருமணத்தை நிறுத்தியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இவர் மீது  மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார்.

அதில் ‘எனக்கும் தர்ஷனுக்கும்  கடந்த ஆண்டு  மே மாதம்  நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க  இருந்தது. ஆனால்  என்னை சில நடிகர்களுடன் தொடர்புப்படுத்திப் பேசி தர்ஷன் திருமணத்தை நிறுத்தினார்.  நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். 

 

ஆனால்  சனம்  ஷெட்டிக்கும் நடிகர் சிம்புக்கும் நெருக்கம் அதிகமானது,   பிகினி உடையில்  பேட்டி கொடுத்தது போன்ற காரணங்களால் தான் தர்ஷன்  சனம்  ஷெட்டியை  வேண்டாம் என்று கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ttn

ஆனால்  இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சனம், நான் மஹா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தான் சிம்புவுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலானது.

ttn

ஆனால் நான் நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் எனக்கு தவறான  உறவு இருப்பதாக தர்ஷன் சந்தேகப்படுகிறார்.

ttn

நான் ஒரு நடிகை என்பது தர்ஷனுக்கு தெரியாதா? என்று புலம்புவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து தர்ஷன் இன்னும் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.