சிம்புவின் மாநாடு படம் கைவிடப்பட்டது: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு! 

 

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வந்த படம் மாநாடு.

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவந்த இந்தப்  படம் ஊட்டியில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடை பெறுவதாக இருந்தது.  இதனிடயே வாரத்தில் சனி,ஞாயிறு இரண்டு நாளைக்கு படப்பிடிப்புக்கு வரமாட்டேன்  என்று எப்போதும் ஒரு ‘ஒழுங்கு ‘முறையைக் கடைப்பிடிப்பார்.இந்தப் படத்திற்கும் அது போல் பல்வேறு  கண்டிசன்களை வைத்திருப்பார் என்று சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. கடந்த மாதமே தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் ‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு  நீக்கப்பட்டதாக அதிரடியாக ஒரு  செய்தியைத் தட்டி விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதில், ‘வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 

அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சியிடம் அலை பேசியில் கேட்ட போது” ‘மாநாடு’படத்தில் சிம்புதான் இல்லையே தவிர அந்த புராஜெக்ட் அப்படியேதான் இருக்கு.சிம்புவுக்கு பதிலாக வேறொரு ஹீரோ நடிக்கிறார்.யார் என்பதை விரைவில் அறிவிப்போம் ” என்றார்.