சிம்புக்கு நன்றி சொல்லிய கனா பட இயக்குநர்

 

சிம்புக்கு நன்றி சொல்லிய கனா பட இயக்குநர்

நடிகர் சிம்புக்கு கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்

சென்னை: நடிகர் சிம்புக்கு கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான “கனா”,கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குளில் வெளியானது . இப்படத்தை “நெருப்புடா” பாடல் மூலம் பிரபலமான அருண்ராஜா இயக்கியுள்ளார். மகளிர் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில்,  கனா’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் தொலைபேசியில் பேசிய சிம்பு அவருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் வாழ்த்துக்கு மிகப்பெரிய நன்றி எஸ்டிஆர் சார். ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் நீங்கள் விலாவரியாக சொன்ன பின்னூட்டமும் உங்கள் நேர்மறை சிந்தனையும் ஆழமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்