சிபிஐ சோதனைக்கெல்லாம் அதிமுக பயப்படாது: அசால்ட் தம்பிதுரை

 

சிபிஐ சோதனைக்கெல்லாம் அதிமுக பயப்படாது: அசால்ட் தம்பிதுரை

கரூர்: சிபிஐ சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அதிமுக அரசு பயப்படாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. மேலும், இந்த சோதனையால் அதிமுக அரசுக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது. ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சோதனைகள் நடப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றனர் என்றார்.

#thambidurai #admk #cbiraid #vijayabaskar