சின்மயி லீக்ஸ்: உண்மை இருந்தால் வழக்கு தொடருங்கள்.. வைரமுத்து அதிரடி!

 

சின்மயி லீக்ஸ்: உண்மை இருந்தால் வழக்கு தொடருங்கள்.. வைரமுத்து அதிரடி!

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என கவிஞர் வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என கவிஞர் வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘Me Too’ என்ற ஹேஸ்டேக் மூலம் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியிருந்தார்.

தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த குற்றச்சாட்டு குறித்து, உண்மைகள் விரைவில் வெளியாகும் என்று மட்டும் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை. உண்மை இருந்தால் வழக்கு தொடரலாம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். அசைக்கமுடியாத ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளேன். 

நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன்” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.