சின்மயி குரலில் வைரமுத்து எழுத்தில் ஒலித்த “தர்மதுரை” பாடல்…டிவிட்டரில் நன்றி கூறிய வைரமுத்து

 

சின்மயி குரலில் வைரமுத்து எழுத்தில் ஒலித்த “தர்மதுரை” பாடல்…டிவிட்டரில் நன்றி கூறிய வைரமுத்து

விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம்  தர்மதுரை. விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ttn

இப்படத்தில் இடம்பெற்ற  ‘எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று’ பாடல் கவிஞர் வைரமுத்து 7 ஆவது தேசிய விருது பெற்று தந்தது.  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மெல்லிய இசையில் உருவான  இப்பாடலை பாடகி சின்மயி மற்றும் ராகுல் நம்பியார் இருவரும்  தங்கள் இனிமையான குரலால் பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் இந்த பாடல் யூடியூபில் இதுவரை 20மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து  தனது டிவிட்டர் பக்கத்தில், தர்மதுரை படத்தின் ‘எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று’ பாடல் இதுவரை 20மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டிருப்பது பரவசம் தருகிறது. நன்றி!’ என்று குறிப்பிட்டுப் படத்தின் இயக்குநர்  சீனு ராமசாமி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இருவரையும் டேக் செய்துள்ளார்.