சின்மயியைத் தாண்டி ரங்கராஜ் பாண்டேயை வேற யாரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாதுங்க…
முன்னாள் பத்திரிகையாளர், இந்நாள் நிகழ்ச்சி தொகுப்பாளர், வருங்கால வில்லன் நடிகர் திருவாளர் ரங்கராஜ் பாண்டேவை தனது ட்விட்டர் பக்கத்தில், ஏறத்தாழ டவுசரை அவுத்துவிட்ட அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்கிறார் சுமார் பாடகியும், பிரபல டப்பிங் கலைஞியுமாகிய சின்மயி.
முன்னாள் பத்திரிகையாளர், இந்நாள் நிகழ்ச்சி தொகுப்பாளர், வருங்கால வில்லன் நடிகர் திருவாளர் ரங்கராஜ் பாண்டேவை தனது ட்விட்டர் பக்கத்தில், ஏறத்தாழ டவுசரை அவுத்துவிட்ட அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்கிறார் சுமார் பாடகியும், பிரபல டப்பிங் கலைஞியுமாகிய சின்மயி.
சின்மயியைப் பொறுத்தவரை அவரால் பாலியல் குற்றச்சாட்டு சொல்லப்பட்ட வைரமுத்துடன் யாரும் எப்போதும் அன்னம் தண்ணி பொழங்கக்கூடாது. அதை மீறினால் சம்பந்தப்பட்டவரை பிறாண்டி எடுத்துவிடுவார். அப்படி மிக சமீபத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பவர் ‘நேர்கொண்ட பார்வையின்’ வில்லன் வக்கீல் நடிகர் ரங்கராஜ் பாண்டே.
வைரமுத்து தனது இடைவிடாத தமிழ்ச்சேவையின் தொடர்ச்சியாக தற்போது தனது தமிழாற்றுப்படையை புரமோட் செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக ரங்கராஜ் பாண்டேவுடன் நேர்காணல் ஒன்றும் நடந்தது. அது கண்டு சின்மயிக்கு ரத்தம் கொதிக்காதா? அடுத்த கணம் தனது ட்விட்டரில்,…ரங்கராஜ் பாண்டே போன்ற பெரும் செல்வாக்குள்ள பத்திரிகையாளர்கள் வைரமுத்து போன்ற சமூகக் குற்றவாளிகளைக் கேள்வி கேட்கும்போது மட்டும் மிகவும் நாசூக்காக நடந்துகொள்வார்கள்.
When journalists as influential as Mr Pandey couldnt grill, intimidate or even ask a few questions of Mr Vairamuthu.
This is how the Boy’s club works.
Drive the girls to death but celebrate molesters.
?Nalla tamizh paNpaadu. https://t.co/LsbhP0LaX6
— Chinmayi Sripaada (@Chinmayi) June 15, 2019
இதுவே ஒரு பெண்மணி கேளிவிகளாலே துளைத்தெடுத்துக் கொல்வார்கள். இங்கே டவுசர் போட்ட பசங்களின் ரொம்ப காலமாகவே இப்படியாகவே இயங்கி வருகிறது’ என்று ஒரே நேரத்தில் ரங்கராஜ் பாண்டேவின் டவுசரையும் வைரமுத்துவின் வேட்டியையும் பதம் பார்க்கிறார் சின்மயி.
இதே வைரமுத்துவின் தமிழாற்றுப்படைக்கு இயக்குநர் மணிரத்னம் வாசித்தளித்த பாராட்டுப் பத்திரம் குறித்து வாயைப் பத்திரமாக மூடிக்கொள்வார் சின்மயி.காரணம் ஊர் அறிந்ததே.