சின்மயியின் அடுத்த லீக்: தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயாணன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கூறிய தகவலை சின்மயி வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயாணன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கூறிய தகவலை சின்மயி வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கு தனிமையில் நேரும் பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற இயக்கம் ஹேஸ்டேக்காக தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கீழ் தரமான பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்ததாக பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் சின்மயிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், நாராயணன் குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
President of the Tamilnadu Brahmins Association – N Narayanan pic.twitter.com/X3OmAea2DM
— Chinmayi Sripaada (@Chinmayi) October 11, 2018
சமுதாயத்தில் தங்களை மிகவும் தூய்மைவாதிகளாக காட்டிக் கொள்ளும் பிராமணர்களின் சங்கத் தலைவராக இருப்பவர் மீதே இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, பிராமணர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த தகவலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பாடகி சின்மயி, பிராமணர் சங்க பிரதிநிதிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.