’சின்னம்மா செத்துட்டாங்க’…மேடையில் உளறிக்கொட்டிய டி.டி.வி அணி நடிகர்…

 

’சின்னம்மா செத்துட்டாங்க’…மேடையில் உளறிக்கொட்டிய டி.டி.வி அணி நடிகர்…

சிறையில் உயிரோடு இருக்கும் சின்னம்மா சசிகலா இறந்துவிட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்துள்ளார் நடிகர் ரஞ்சித்.

கடும் வெயிலின் காரணமாக இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல்வாதிகள் மேடையில் உளறிக்கொட்டிவருவது  நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சிறையில் உயிரோடு இருக்கும் சின்னம்மா சசிகலா இறந்துவிட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்துள்ளார் நடிகர் ரஞ்சித்.

சுத்தமாக மார்க்கெட் இழந்த ரஞ்சித்

ranjith

சினிமாவில் சுத்தமாக மார்க்கெட் இழந்த நிலையில் இருக்கும் நடிகர் ரஞ்சித் சில தினங்களுக்கு முன்னர் பா.ம.க.விலிருந்து வெளியேறி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.கவில் ஐக்கியமானார்.அக்கட்சியில் நட்சத்திரப்பஞ்சம் இருந்த நிலையில் சேர்ந்த உடனே அவருக்கு நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

அ.ம.மு.கவில் ஐக்கியமான  ரஞ்சித்

ranjith

அதையொட்டி  தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் நேற்று, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன். முருகேசனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

சின்னம்மா இறந்துவிட்டார்

ranjith

அப்போது பேசிய அவர், அம்மா இறந்துவிட்டார் என்று சொல்ல நினைத்து டங் ஸ்லிப்பாகி சின்னம்மா இறந்துவிட்டார் என்று முழுமையாக உளறிமுடிக்கவே அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். மக்கள் ரியாக்‌ஷனைப் பார்த்ததும் தான் உளறிதை உணர்ந்துகொண்ட ரஞ்சித் அவசர அவசரமாக அடுத்த டாபிக்குக்கு மாறி அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

இதையும் வாசிக்க: சென்னை விமான நிலையத்தில் தரையில் படுத்துத்தூங்கிய தோனி…