சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக நடிகைகளுடன் உல்லாசம்: தமிழ் சினிமா பிரமுகர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்!

 

சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக நடிகைகளுடன் உல்லாசம்: தமிழ் சினிமா பிரமுகர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 20 க்கும் மேற்பட்ட பாலியல்ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த காஸ்டிங் இயக்குநர் மோகன் என்பவர் மீது பெண் ஒருவர்  புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 20 க்கும் மேற்பட்ட பாலியல்ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த காஸ்டிங் இயக்குநர் மோகன் என்பவர் மீது பெண் ஒருவர்  புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி துணை நடிகர் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன் என்பவர் புதிய படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என முகநூலில் விளம்பரம் வெளியிடுவது  வழக்கமாக வைத்துள்ளார். அப்படி வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை மது அருந்தச் செய்து ஆடவைத்து ரசிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்று  கூறப்படுகிறது

mohan

இந்நிலையில் காஸ்டிங் இயக்குநர் மோகன் என்பவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘ காஸ்டிங் இயக்குநரான மோகன், தன்னுடைய தோழியையும், மேலும் பல பெண்களையும் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆசை வார்த்தைக் கூறி மோகன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதனை வெளியில் சொன்னால் அப்பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மோகன் மிரட்டியதாக’  அப்பெண் அந்த ஆடியோவில்  தெரிவித்துள்ளார்.

mohan1

தனது புகாருக்கு ஆதாரமாக, மோகன் பல பெண்களுடன் இருந்த வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட உள்ளதாகவும், போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

mohan3

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மோகன், இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் தனக்கு தெரியாமல் தனது செல்போனில் இருந்து ஹேக் செய்து திருடப்பட்டவை என்றும், தனது அறையில் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பது தனக்கே தெரியாது என்று மறுத்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.