சினிமா போல் அரசியல் பேசுகிறார் கமல்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

சினிமா போல் அரசியல் பேசுகிறார் கமல்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சினிமா போல் நினைத்துக்கொண்டு கமல்ஹாசன் அரசியல் பேசுகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

விருதுநகர்: சினிமா போல் நினைத்துக்கொண்டு கமல்ஹாசன் அரசியல் பேசுகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசியலுக்கு லாயக்கு இல்லாமல், சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன், தி.மு.க. நல்ல வி‌ஷயங்களை என்றும் கையில் எடுத்தது கிடையாது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்ததை பாராட்டியது கிடையாது.

கொடநாடு பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஏற்கனவே கூறி விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி கருத்து கூற முடியாது. சினிமாவில் நடித்ததால் நடிகர் கமல்ஹாசனுக்கு எல்லாமே கதையாக தெரிகிறது. கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. கோடநாடு பிரச்னையில் முதல்வருக்கு துளி கூட சம்பந்தம் இல்லை என்றார்.