சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் நடந்த கொள்ளை..!

 

சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் நடந்த கொள்ளை..!

அந்த பெண்ணிடம் இருந்து, எல்லா நகைகளையும் மீட்டிருக்கிறார்கள். அன்புச் செழியன் வீட்டிலேயே ஆட்டையைப் போட்டுவிட்டார்களா? என சினிமா வட்டாரத்தில் ஒரே பரபரப்பு.

மதுரையைச் சேர்ந்தவர் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். அ.தி.மு.க.,வில் மாவட்ட இளைஞரணி இணைச் செயலராக இருக்கிறார். சமீபத்தில்தான், இவரது அப்பா மறைந்தார். அந்த சோகம் முடிவதற்குள், இவரது வீட்டில் இருந்த, 50 சவரன் நகைகள் திருடு போய் விட்டன. இது குறித்து போலீஸில் புகார் கொடுத்தும் விஷயம் வெளியில் வராமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

anbu chezhiyan

அ.தி.மு.க., தரப்பில் இருந்தும் அழுத்தம் வர போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமலே, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தான் அந்த வீட்டில் வேலை செய்த பெண்ணே நகைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்திருக்கிறது. அந்த பெண்ணிடம் இருந்து, எல்லா நகைகளையும் மீட்டிருக்கிறார்கள். அன்புச் செழியன் வீட்டிலேயே ஆட்டையைப் போட்டுவிட்டார்களா? என சினிமா வட்டாரத்தில் ஒரே பரபரப்பு.