சினிமா பாணியில் ரகசிய அறை…கத்தை கதையாக பணம்…ஒரு மரணம்…சிக்கலில் லாட்டரி அதிபர்!

 

சினிமா பாணியில் ரகசிய அறை…கத்தை கதையாக பணம்…ஒரு மரணம்…சிக்கலில் லாட்டரி அதிபர்!

ரகசிய அறையில் கத்தை கதையாக பணம்…சினிமா படங்ககளில் வருவது போல் ரகசிய அறைகளில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த வருமான வரி துறையினர்.மீண்டும் அதிர்ந்து கிடக்கிறது கோவை.
 

ரகசிய அறையில் கத்தை கதையாக பணம்…சினிமா படங்ககளில் வருவது போல் ரகசிய அறைகளில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த வருமான வரி துறையினர்.மீண்டும் அதிர்ந்து கிடக்கிறது கோவை.

லாட்டரி அதிபர் மார்ட்டின் என்று சொன்னாலே லாட்டரி வாங்காத ஆளுக்குகூட நல்லாவே தெரியும்.கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு,கோயம்பத்தூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் பங்களா தொடங்கி,இந்திய முழுக்க உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனங்கள்,வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக நுழைந்தது ஐ.டி டிப்பார்ட்மெண்ட்.

martin

மார்ட்டின் நிறுவனத்தில் கேஷியராக இருக்கும் பழனி தொடங்கி பல்வேறு ஆட்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்திருக்கிறது.கடந்த ஐந்து நாட்களில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 595 கோடி ரூபாய்வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

rupees

அதற்கான ஆவணங்களைக் கைப்பற்றிய ஐ.டி ஆட்களுக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை!நுட்பமாக கவனித்ததில்,சந்தேகத்தின் பேரில் ஒரு சுவரை தட்டிப் பார்த்திருக்கிறார்கள்.சினிமாவில் வருவது போல் சுவருக்கு பின்னால் ரகசிய அறை இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்! அதற்குள் கத்தை கதையாக பதுக்கி வைத்திருந்த்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.அதன் மதிப்பு எட்டு கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்!
 
இதற்கிடையில் இந்த ரைடில் முக்கியமான சாட்சியாக கருதப்படும் கேஷியர் பழனி,விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே மர்மமான முறையில் இறந்திருப்பதும் தொழிலதிபர் மார்டினுக்கு சிக்கலை உண்டாக்கியிருக்கிறது!