சினிமா பாணியில் நடந்த கொடூரம்: மனைவியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கணவன்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

சினிமா பாணியில் நடந்த கொடூரம்: மனைவியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கணவன்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

மனைவியின் உடலில் மின்சாரம் பாய வைத்துக் கணவனே கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: மனைவியின் உடலில் மின்சாரம் பாய வைத்துக் கணவனே கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் பழைய போலீஸ் லைன் வீதியை சேர்ந்தவர் இன்பம். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா  என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். சில வருடங்களாக கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே ரம்யாவின் பெற்றோர் தனது மகளை கணவர் இன்பம் வரதட்சணைக் கொடுமை செய்வதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் கணவன் இன்பத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்நிலையில் ரம்யா வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தன் மனைவி மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிய இன்பம் அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். தகவலறிந்து வந்த பெற்றோரும், உறவினர்களும் ரம்யா முகம் வீங்கிய நிலையிலும் அணிந்திருந்த நகைகள் ஏதும் இல்லாமலும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து காவல் நிலையம் சென்ற உறவினர்கள் ரம்யாவை நகைக்கு ஆசைப்பட்டு கணவன் இன்பம் மின்சாரத்தின் மூலம் கொலை செய்துவிட்டதாகப் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக உள்ள கணவன் இன்பத்தை தேடி வருவது  குறிப்பிடத்தக்கது.