சினிமா பாணியில் காதலியை பார்க்க வந்த பிரபல ரவுடி: துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்த போலீசார்!?

 

சினிமா பாணியில் காதலியை பார்க்க வந்த பிரபல ரவுடி: துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்த போலீசார்!?

பிரபல ரவுடி விஜய் ஃபார்மனாவை போலீசார்  துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். 

லக்னோ: பிரபல ரவுடி விஜய் ஃபார்மனாவை போலீசார்  துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். 

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல ரவுடி விஜய் ஃபார்மனா. இவரது தந்தை ராணுவ அதிகாரி ஆவார். விஜய் ஃபார்மனா ஹரியானாவில் உள்ள கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட 50ற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. ஏராளமான வழக்குகளில் சிக்கி இருந்தாலும் இவரைப் பிடிப்பது போலீசாருக்கு குதிரை கொம்பாக இருந்து வந்தது. ஏனென்றால் இவர் தனது இடத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பாராம். 

vijay

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் நாகலாந்து அரசியல் பிரமுகர் ஒருவரைக்  கொலை செய்ய  விஜய் ஃபார்மனாவுக்கு 80 லட்சம் ரூபாயும், ஒரு காரும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது நபருடன் கூட்டுச்சேர்ந்து சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு வந்துள்ளார் விஜய் ஃபார்மனா. 

crime

இந்நிலையில் நீண்ட நாட்கள் தேடப்பட்டு வந்த  விஜய் ஃபார்மனா  துப்பாக்கி முனையில் கைதாகியுள்ளார். லக்னோவில் உள்ள வணிகவளாகத்துக்குத் தன் காதலியை பார்க்க விஜய் ஃபார்மனா வருவதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.  இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். நீண்ட நாட்கள் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கைதாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.