சினிமா ஆசைகாட்டி மாணவியை பலாத்காரம் செய்த நடன இயக்குநர்: கடைசியில் கோவில் திருவிழாவில் ஆட வைத்த அவலம்!?

 

சினிமா ஆசைகாட்டி  மாணவியை பலாத்காரம் செய்த நடன இயக்குநர்: கடைசியில் கோவில் திருவிழாவில் ஆட வைத்த அவலம்!?

சினிமா  வாய்ப்பை தேடி வந்த பெண்ணை நடன இயக்குநர்  ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி: சினிமா  வாய்ப்பை தேடி வந்த பெண்ணை நடன இயக்குநர்  ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

dance

 
சினிமா வாய்ப்புக்காகத் தவறான எண்ணம் படைத்த விஷமிகளிடம் சில பெண்கள் சிக்கி கொள்கின்றனர். அப்படி சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணை போலீசார் ஒரு வருடம் கழித்து மீட்டுள்ள  சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சேர்ந்தவர் அபி அஜித். நடன பள்ளி வைத்திருக்கும் இவரிடம் மனைவி ஒருவர் நடன கற்க வந்துள்ளார். அவரின் நடனத்தை கண்ட அபி அஜித் அவரிடம் நீ சிறப்பாய் நடனம் ஆடுகிறாய். உனக்கு நான் சினிமாவில் சான்ஸ் வாங்கி தருகிறேன் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

rape

இதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு திருச்செந்தூருக்கு இயக்குநர்  ஒருவர் வந்துள்ளார்.அவரிடம் அழைத்து கொண்டுபோய் உன்னை காட்டினால் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று கூறி அந்த மாணவியை திருச்செந்தூர் கூட்டி சென்றுள்ளார். அங்கு விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியிருந்த  தன் நண்பரை இயக்குநர்  என்று கூறி அறிமுகப்படுத்தியதோடு, இருவரும் சேர்ந்து மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். 
 இதையடுத்து மாணவியை காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர்  கடந்த அக்டோபர்  மாதம் போலீசில் புகார் கொடுக்க, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். 

rape

இந்நிலையில் ஒருவருடம் கழித்து இராஜபாளையத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் நடனம் ஆடிய அபி அஜித்தையும் அந்த மாணவியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் மாணவிக்கு  சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியில் விடாமல் அபி அஜித் தன்னுடைய கட்டுப்பாட்டில் மாணவியை வைத்திருந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து மாணவியின் வாக்குமூலத்தை வைத்து அபி அஜித்தை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.