சினிமாவை தாண்டி எனக்கு இருக்கும் தீராத ஆசை: ரகுல் ருசீகரம்

 

சினிமாவை தாண்டி எனக்கு இருக்கும் தீராத ஆசை: ரகுல் ருசீகரம்

சினிமாவுக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு விஷயத்தின் மீதுள்ள தீராத ஆசை குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் மனம் திறந்துள்ளார்.

சென்னை: சினிமாவுக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு விஷயத்தின் மீதுள்ள தீராத ஆசை குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் மனம் திறந்துள்ளார்.

கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே’, கார்த்தியுடன் ‘தேவ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாது தெலுங்கிலும் சில படங்களில் ரகுல் ப்ரீத் சிங் பிசியாக நடித்து வருகிறார்.

rakul

சமீபத்தில் ரகுல் அளித்த பேட்டி ஒன்றில், ‘சினிமாவிற்கு தனக்கு மிகவும் பிடித்தது உணவு தான். ஒரு ஹோட்டலையும் விட மாட்டேன். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு ஸ்பெஷல் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு சாப்பிட்டுவிடுவேன். அதனால் எல்லா ஊர் சமையல் ருசியும் எனக்கு அத்துப்படி என தெரிவித்துள்ளார்.

உணவு மீதுள்ள அதீத பிரியத்தால் ஒரு ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து, அங்கு எல்லா ஊர்களின் ஸ்பெஷலும், எனக்கு மிகவும் பிடித்த உணவுகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த ஆசை எப்போது நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.