சினிமாவை குறை கூறிய கனிமொழி…பொங்கி எழுந்த குஷ்பு: ஒரே மேடையில் அனல் பறந்த விவாதம்!
கடுமையான தண்டனைகள் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுக்க கடுமையான தண்டனைகள் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்பது தீர்வாகாது. இருப்பினும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது.. இதுபோன்ற குற்றணக்கில் அதிகரிக்க திரைப்படங்களில் பெண்கள் குறித்து வரும் காட்சிகளும் ஒரு முக்கிய காரணம். இதற்கு முக்கிய தேவை பாலியல் கல்வி. அதை அரசு கொண்டு வர வேண்டும்’ என்றார்.
இதையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, திரைப்படங்கள் தான் இது போன்ற குற்றங்களுக்குக் காரணம் என்றால் நாம் தான் அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் போன்ற படங்களை பார்க்கிறோம். சமூக குற்றங்களுக்கு டாஸ்மாக் மற்றும் சினிமாவை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள். சமூகத்தில் நாடாகும் அணைத்து விஷயங்களுக்கும் சினிமா மட்டுமே காரணம் இல்லை. முதலில் நம்மிடம் தவறாக நடப்பவர்களை எதிர்கொள்ள வேண்டும்’ என்றார்.