சினிமாவுக்கு போனதை மறைக்க பாலியல் வல்லுறவு நாடகமாடிய சிறுமி!

 

சினிமாவுக்கு போனதை மறைக்க பாலியல் வல்லுறவு நாடகமாடிய சிறுமி!

ஸ்ரீகாகுளத்தில் இருந்து ஹைதராபாத் நகருக்கு பிழைக்க வந்த சிறிய குடும்பம் அது. ஹைதராபாத் புறநகர் பகுதியான சங்கர ரெட்டி மாவட்டம், அமீனூரை அடுத்த வானிநகரில் இருக்கும் ஒரு அப்பார்ட் மெண்டில் அப்பா செக்யூரிட்டியாகவும் அம்மா வீட்டு வேலை செய்பவராகவும் செட்டிலானார்கள்.

ஸ்ரீகாகுளத்தில் இருந்து ஹைதராபாத் நகருக்கு பிழைக்க வந்த சிறிய குடும்பம் அது. ஹைதராபாத் புறநகர் பகுதியான சங்கர ரெட்டி மாவட்டம், அமீனூரை அடுத்த வானிநகரில் இருக்கும் ஒரு அப்பார்ட் மெண்டில் அப்பா செக்யூரிட்டியாகவும் அம்மா வீட்டு வேலை செய்பவராகவும் செட்டிலானார்கள். ஸ்ரீகாகுளத்திலேயே ஒன்பதாம் வகுப்பில் பாதியி நின்றுவிட்ட 16 வயது மகள் மட்டும் வீட்டில் இருந்தாள்.நேற்றுக் காலை 9.30 மணியளவில் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வெளியே போன சிறுமி மாலை தன் தாய்க்கு போன்செய்து தன்னை நான்குபேர் காரில் கடத்திச்சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாகச் சொல்லி அழுதிருக்கிறாள். அவள் தாய் 100 க்கு ஃபோன் செய்து புகார் சொல்லிவிட்டு அக்கம்பக்கம் இருந்தவர்களைத் திரட்டிக்கொண்டு அங்கே போனபோது சிறுமி அழுதுகொண்டு இருந்திருக்கிறாள். போலீசார் அந்தச் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள். மீண்டும் விசாரித்தபோது,தன்னை அவர்கள் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாகவும் தான் கூச்சலிட்டதாலும், அந்தப்பக்கமாக அப்போது ஒரு கார் வந்ததாலும் தன்னைக் கடத்திய நால்வரும் ஓடி விட்டதாகவும் மாற்றிச் சொல்லி இருக்கிறாள்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி காமிராப் பதிவுகளைப் பார்த்தபோது அந்தச் சிறுமி, அவளே விருப்பத்துடன் ஒரு இளைஞனுடன் பைக்கில் ஏறிச்செல்லுவது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுமியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.