சினிமாவில் மதத்தை கலக்க கூடாது: பிரபல நடிகையை விமர்சனம் செய்த சித்தார்த்!

 

சினிமாவில் மதத்தை கலக்க கூடாது: பிரபல நடிகையை விமர்சனம் செய்த சித்தார்த்!

மதம் காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த சைரா வாசிமை,  நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை: மதம் காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த சைரா வாசிமை,  நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார். 

‘தங்கல்’ படத்தின் மூலம் 15 வயதிலேயே நடிகையாக பிரபலமானவர் சைரா வாசிம். மல்யுத்த வீராங்கனையாக நடித்து இவருக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இவர் நடித்த  சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படமும் வெற்றி பெற்றது. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரான சைரா வாசிம் மதம் காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார்.

அது குறித்து அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், ‘5 ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த முடிவால் வாழ்க்கை மாறிவிட்டது. நான் செய்யும் வேலையில் மகிழ்ச்சி இல்லை. திரையுலக வாழ்க்கை எனது நம்பிக்கை மற்றும் மத உறவுகளில் தலையிடுவதால் சினிமா எனக்குப் பொருத்தமானது இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த திடீர் முடிவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இது குறித்து நடிகர் சித்தார்த் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘இது உங்களுடைய வாழ்க்கை. பிடித்ததைச் செய்யுங்கள். கலையும், தொழிலும்தான் வாழ்க்கை என்று நான் நம்புகிறேன். இதில் மதத்தை கலக்க கூடாது என்று போராடுகிறோம். அதற்கு இங்கு வேலை இல்லை. உங்கள் மதம் காரணமாக விலகுவதாக இருந்தால் நீங்கள் சினிமா துறைக்கு பொருத்தமானவர் இல்லை’ என்று கூறியுள்ளார்.