சினிமாவில் நடிச்சாலும் மருத்துவத்தை கை விடமாட்டேன் | சாய் பல்லவிக்கு பாடம் நடத்தும் நடிகர் தீரஜ்

 

சினிமாவில் நடிச்சாலும் மருத்துவத்தை கை விடமாட்டேன் | சாய் பல்லவிக்கு பாடம் நடத்தும் நடிகர் தீரஜ்

‘போதை ஏறி புத்தி மாறி’ என்கிற தலைப்பில் சின்ன பட்ஜெட் படம் ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  

‘போதை ஏறி புத்தி மாறி’ என்கிற தலைப்பில் சின்ன பட்ஜெட் படம் ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  

bodhai

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குனர் சந்துரு பேசுகையில், குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா கிடைத்தது. இது ஒரே வீட்டில் நடக்கும் கதை. இந்த படத்துக்கு சவுண்ட் மிக்ஸிங் ஒரு முக்கிய அம்சம். நான் ஒரு ரசிகனாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். தலைப்புக்கு மிகவும் பொருத்தமான படமாக இருக்கும் என்றார். 

bodhai yeri puthi mari

தொடர்ந்து பேசிய படத்தின் நாயகன் தீரஜ், ‘சிறுவயதில் இருந்தே எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்து வந்தது. ஆனால் மருத்துவராக பணியாற்றுகிறேன். தினமும் அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய ஆசைக்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமாவிற்காக என்னுடைய மருத்துவ பணியை நிச்சயமாக கைவிட மாட்டேன்’ என்று உருக்கமாக பேசினார். 

thiiraj

 

குறிப்பாக நடிகர் தீரஜ் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகன் உதயநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். உதயநிதி தனிப்பட்ட பணியை தாண்டி கட்சி பணிக்காக சென்றாலும் கூட தீரஜ் அவருடன் இருப்பாராம். அந்த அளவிற்கு நெருங்கிய நண்பராக இருவரும் வலம்வருகிறார்கள். 

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே நடிகை சாய்பல்லவி மருத்துவப்படிப்பு படித்திருந்தாலும், திரைப்படங்களில் நடிப்பதற்காக மருத்துவத்துறைக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர நடிகையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.