சிதம்பரம் ஒரு ஃபிராடு மட்டுமல்ல கோழை – ஆடிட்டர் குருமூர்த்தி சாடல்!

 

சிதம்பரம் ஒரு ஃபிராடு மட்டுமல்ல கோழை – ஆடிட்டர் குருமூர்த்தி சாடல்!

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேடப்படும் நபர் என சிபிஐ, அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் வெளியிட்டது. 

சிதம்பரம் ஒரு ஃபிராடு மட்டுமல்ல கோழை – ஆடிட்டர் குருமூர்த்தி சாடல்!

முன்னதாக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம், நேற்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ப. சிதம்பரம். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும், அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துளார். அவருடைய மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவில்லை. 

 

 

இந்நிலையில் பாஜக ஆதரவாளரும், துக்ளக் இதழின் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி, “சிதம்பரம் குற்றவாளி மட்டுமல்ல, அவர் ஒரு கோழையும் கூட என்பது அவர் தலைமறைவானதன் மூலம் தெரிகிறது. போலி ஆவணங்களால் கைது செய்யப்பட்டு நேர்மையாக அதை எதிர்கொண்டவர்கள் நாங்கள். அதனால் ப.சிதம்பரத்தை ஃப்ராடு என்று மட்டுமல்ல கோழை என்றும் அழைக்கலாம்” என்று கூறியுள்ளார்.