சிதம்பரத்திற்கு வெளிநாட்டில் 17 வங்கி கணக்குகளும், 10 அசையா சொத்துக்களும் உள்ளன- அமலாக்கத்துறை

 

சிதம்பரத்திற்கு வெளிநாட்டில் 17 வங்கி கணக்குகளும், 10 அசையா சொத்துக்களும் உள்ளன- அமலாக்கத்துறை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி நீதிமன்றம் அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ப.சிதம்பரத்தை கைது செய்தனர். மேலும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக 5 நாள் காவலில் எடுக்க சி.பி.ஐ. அனுமதி கேட்டது. இம்மாதம் 26ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

அமலாக்கத்துறை கைது செய்யாமலிக்க சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில், பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதுகுறித்து  அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, “ சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்து டிஜிட்டலானது. கைது செய்தால்தான் உண்மை வெளிவரும், முன் ஜாமீன் எனும் பாதுகாப்பு இருந்தால் ப. சிதம்பரத்தை விசாரிக்க முடியாது. சிதம்பரத்திற்கு வெளிநாட்டில் 17 வங்கி கணக்குகளும், 10 அசையா சொத்துக்களும் உள்ளன. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுத்த நடவடிக்கை அல்ல…. வலுவான ஆதரங்கள் கிடைத்ததால் எடுத்த கைது நடவடிக்கை” என வாதத்தை முன்வைத்தனர். இதைக்கேட்ட  உச்சநீதிமன்ற நீதிபதிகள்  ஆகஸ்ட்ட் 26 ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.